Tuesday 24 December 2013

2013 - டாப் 10 காமெடிகள்: (என் பார்வையில்)

10.  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் IPL சூதாட்டத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்த ஒட்டுமில்ல, உறவுமில்ல  - சிமெண்ட் மூட்டை சீனிவாசன்.

09.  நம்ம மான்புமிகு முதல்வர் அம்மாஆ அவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமா ஆக்க பாடுபடுறாங்க - டாகுடர் விஜய் (தலைவா ரிலீசுக்காக)

08.  ஆஸ் ஐ ஆம் சஃப்பரிங் ஃப்ரம் ஃபீவர் ஐ ஆம் அநேபிள் டு கமிங் டு காமன்வெல்த் இஸ்கூல் - Letter from மண்நுமோகன்ஜி to ராசபக்ச


07.  ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம் - சோனியா காங்கிரஸ்


06.  பாரத ரத்னா (வாழ்த்துக்கள் சச்சின்)


05.  அவர் ஒரு பெண், அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை, ஆனாலும் கை விலங்கிட்டு நிர்வாணப் படுத்தியிருக்கிறார்கள், தேவயானியை மீட்காமல் ஓய மாட்டேன் - சல்மான் குர்ஷித்


04.  டெல்லி சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி


03.  விஸ்வரூபம் ஒலகம் முழுக்க ரிலீஸ் பண்றோம், அமெரிக்கா அனுப்புறோம், கொறஞ்சது பத்து ஆஸ்காரவது அள்றோம் - ஒலக நாயகனின் அடிபொடிகள்


02.  கூடன்குளத்திலிருந்து உற்பத்தி செய்யப் படும் 4000 மெகாவாட் மின்சாரத்திலிருந்து தமிழகத்திற்கு கனிசமான அளவு வழங்கப்படும் - all அமைச்சர்ஸ் from சென்ட்ரல் கவர்மென்ட்


*

 
*

*

01.  பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி

Tuesday 17 December 2013

பாம்பின் கால்...!!!

இரண்டு நாட்களுக்கு முன் எமது அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் வழக்கம் போல் காலை அலுவலகத்தைத் திறந்தால், நடு ஹாலில் சுமார் எட்டடியிலிருந்து பத்தடி நீளமுள்ள கருநாகம் ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருந்திருக்கிறது.  அடிப்பதற்கு குறைந்தது மூன்று பேராவது வேண்டும், அவ்வளவு நீளம், மற்றும் உடல்வாகு கொண்ட முரட்டு ஜீவன்.  கதவைத் திறந்து விட்டு ஒரு தடியை வைத்து விரட்டியிருக்கிறார், முதலில் சீறிய நாகம் பின்பு பணிந்து வெளியே ஓடி விட்டிருக்கிறது.  நம்மாளு அதை பின்னால் சென்று விரட்டியபடி வீடியோ எடுத்திருக்கிறார்... அது காம்பவுண்ட் ஓரத்தில் உள்ள எலி வளையின் உள்ளே புகுந்து விட்டது.

இங்கு வீடியோவில் காட்டப் பட்டுள்ளது அப் பாம்பின் ஒரு பகுதி மட்டுமே...!!
நான் அலுவலகம் வந்த பின்பு சிறிது நேரம் இந்தக் கதை ஓடி அடங்கி அவரவர் வேலையைப் பார்க்க செல்ல, ஒரு 10.30 மணி வாக்கில் அதே வளையின் வழியே தலையை மட்டும் அது காட்டி உள்ளே சென்று விட,  மீண்டும் ஏரியாவில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.  நான் கிண்டியிலுள்ள வன அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டேன்.

போனை எடுத்தவர்கள் பாம்பின் குலம், கோத்திரம், ஜாதகம், பிறந்த நேரம், நட்சத்திரம், ருதுவான நேரம், அங்க அடையாளம், எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்து கொண்டு இன்னொரு செல் நம்பர் கொடுத்து அவரை தொடர்பு கொள்ளமாறு கூறினார்கள்.  அந்த எண்ணிற்கு அழைக்க ஒரு பெண்மணி எடுத்தார்...

"நான் ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, பாம்பு புடிக்கிறவர் இருக்காருங்களா.."
"அவரு இப்போ பாம்பெல்லாம் புடிக்கிறதில்லீங்க..."
"இல்லீங்க, ஆபீஸ்ல இந்த நம்பர் தான் கொடுத்தாங்க..."
"அய்யே... இந்தா உனக்குத்தான், பாம்பு புடிக்கனுமாம்...; (சிறிது நேரம் கழித்து ஓர் ஆண் குரல்), சொல்லுங்க சார், எங்க இருந்து பேசறீங்க..."
"ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, நாகப் பாம்பு ஒன்னு வீட்ல இருக்கு, புடிக்கணும்.."

மறுபடி இவர் பாம்பின் வயது, marital status , கல்வியறிவு, அனுபவம், சம்பளம், notice period, job location எல்லாவற்றையும் கேட்டுவிட்டு,
"சார்.. இப்போ நான் வேலைக்குப் போறதில்ல, நான் ஒரு நம்பர் தர்றேன், அவரான்ட பேசுங்க, வந்து பிடிப்பார்..." என்று சொல்லி ஒரு நம்பர் தந்தார். 

சூரியன் படத்தில் கவுண்டமணி "சத்திய சோதனை"ன்னு சொல்லும் காட்சி கண்முன் வந்து போனது... விக்கிரமாதித்தன் கணக்கா மறுபடியும் கொடுத்த எண்ணிற்கு அழைத்தேன்.
"ஹலோ..."
"பாம்பு புடிக்கிறவருங்களா..."
"ஆமா, நீங்க..."
"ஆதம்பாக்கத்திலிருந்து பேசுறேங்க, நாகப் பாம்பு ஒன்னு வீட்ல இருக்கு, புடிக்கணும்.."
"இந்த நம்பர் உங்களுக்கு யார் கொடுத்தா..." (அடேய்ய்ய்ய்ய்...)
"ஆபீஸ்ல கொடுத்தாங்க..."
"என்ன பாம்பு?"
"கரு நாகமுங்க..."
"எவ்வளவு நீளம்?"
"எட்டடி இருக்கும்..."
"வீட்டுக்குள்ள இருக்கா...?"
"வீட்டு காம்பவுண்டுக்குள்ள இருக்கு..."
"மேலேயே இருக்கா.."
"இல்ல, எலி பொந்துக்குள்ள போயிடுச்சி..."
"எலி பொந்து, எவ்ளோ பெரிசு இருக்கு?
"தெரியாது..."
"எலி பொந்து கால்வாயோட சேர்ந்திருக்கா?" (யப்பா சிபிஐ, நான் வேணா உள்ள பூந்து பாக்கவா..?)
"தெரியாது..."
"இப்போ வெளிய இருக்கா, உள்ள இருக்கா?"
"உள்ள போயிட்டு, வெளிய வந்துட்டு மறுபடி உள்ள போயிடுச்சி..."
"நீங்க ஒன்னு பண்ணுங்க..."
"சொல்லுங்க..."
"அது மறுபடி வெளிய வந்தா, என்னான்ட போன் பண்ணி சொல்லுங்க..."
"சொன்ன உடனே வந்து புடிப்பீங்களா?"
"இல்ல, போன் பண்ணி சொல்லிட்டு என்னை வந்து பிக்கப் பண்ணிட்டு போங்க..."
"நீங்க எங்க இருக்கீங்க?"
"வேளச்சேரி செக்போஸ்ட் கிட்ட"
"ஒரு ஆட்டோ புடிச்சு வந்துருங்க, நான் அதுக்குண்டான காசை கொடுத்திர்றேன்..."
"அப்படியெல்லாம் நாங்க வரக் கூடாதுங்க, பார்ட்டி தான் வந்து எங்கள இட்டுக்கினு போகணும்..."
"அய்யா பாம்பு புடிக்கிறவரே, ஒன்னு சொல்லட்டுங்களா..!!"
"சொல்லுங்க..."
"மறுபடி பாம்பு வந்தா நானே புடிச்சு ஒரு சாக்குல போட்டு கட்டி எடுத்துட்டு வந்து உங்ககிட்ட கொடுத்திர்றேன், ஓகேவா?!"
"இன்னா சார், தமாஷ் பண்றீங்களா?"
"யோவ்... இவ்ளோ நேரம் நீ பண்ண, நான் இப்போ பண்ணக் கூடாதா?"

ம்ஹ்ம்ம்... பாம்பு இன்னும் வெளிய வரல....
பாம்பின் கால்......, சத்தியமா எனக்குத் தெரியல...!!


- அன்புடன்
- மலர்வண்ணன்