Wednesday 23 December 2015

2015 - டாப் 15 சொலவடைகள்

ஆளாளுக்கு அவார்டு குடுக்குறாங்க..., நாமும் எதையாவது போடுவோம்...
2015 - டாப் 15 சொலவடைகள்:



 
15. "இரண்டு முறை யேசுவிடம் பேசியுள்ளேன்..."
- உமாசங்கர் ஐஏசு




 
14. "சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்டதில் தாவூதின் பங்கு உள்ளது என்பதற்கான ஈமெயில் ஆதாரம் என்னிடம் உள்ளது...” - சுbeepசாமி



 
13. "விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம், தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க ராஜயோகம் பழகி விதைகளின் சக்தியைக் கூட்டலாம்..."
- வேளாண்(!) அமைச்சர் ராதாமோகன் சிங்




 
12. "நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாளன்..."
- ஒலக நாயகன்




 
 11. "நேதாஜி உயிருடன் உள்ளார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.."
- வைகோ




 
 10. "இது அவரோட சொந்த கருத்து, அதுக்கும் BJP-க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..."
- டமில் மீசிக் சவுன்டி




 
9. "திமுக ஆட்சிக்கு வந்தால் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் இருக்காது.., விடியட்டும், முடியட்டும்..."
- நிரந்தர இளைஞரணி தளபதி




 
8. "குஷ்புவின் உருவில் அன்னை இந்திராவைப் பார்க்கிறேன்..."
- இ.வி.கே.எஸ்.இழ்ழங்கோவன




 
7. "மாற்றம்-முன்னேற்றம், முதல் நாள்(!) முதல் கையெழுத்து.."
- லவ் பெல்




 
6. "மா.மி.பு.த.இ.தெ.டா.அ. ஆணைக்கிணங்க தமிழகத்தில் அதிகளவு மழை பொழிந்துள்ளது..."
- சேலம் கலெக்டர் சம்பத் IAS 




 
5. "ராணுவத் தளபதி போல் செயல்பட்டார் முதல்வர்..."
- டினமழர்




 
4. "ஒன்னு குடுக்கட்டுமா..?!"
- ஏ.சி.பி. சார்




 
3. "இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்.."
- டலீவர்




 
2. "கம்ம்ன்னு இருக்க மாட்டியா, தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க..."
- கேப்டன்




 
 1. "எனக்கென்று யாரும் கிடயாது, உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன்.."
- ஆத்தா


Wednesday 16 December 2015

எனது அரசு உங்கள் அரசாக மாறிய அற்புதம்: நன்றி யேசப்பா

"வணக்கம், உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்"
- என்னது!! அன்புச் சகோதரின்ற அடைமொழிக்கு ராமதாஸ் காப்பி ரைட்ஸ் குடுத்துட்டாரா?!

"கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்."
- பச்ச போர்டு வெச்ச கடையெல்லாம் தொறந்து தானே இருந்துச்சி..!!

"கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்."
- குமாரசாமிகள் ஓய்வதில்லை..!!

"உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி."
- to சீமான் & வைகோ, வேற வசனம் ரெடி பண்ணவும்..!!

"போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.."
- கணக்கு வழக்கு எல்லாம் நம்ம கடலூர் கலெக்டர் தானே பாக்குறாரு..!?

"அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்."
- வளர்மதியக்கா சாம்பிள் ஒன்னு போதுமே...!!

"உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்..."
- ஸ்தோத்ரம் ஆண்டவரே... அல்லேலூயா....!!

"எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்."
- சசிகலான்னா, மாருகோ மாருகோ பாட்டுக்கு வருமே அந்த புள்ள தானே..!! கமலை விட நல்லா ஆடுச்சுப்பா..!!

"என் பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.."
- சூப்பர் ஸ்டார் யோசிச்சு வெச்சிருந்த வசனம், பாத்ரூம்ல சொல்லிப் பாத்துட்டு இருக்கும் போது எப்படியோ லீக் ஆகிடுச்சி..., அந்த beepப் பயல வீட்டுப் பக்கம் சேக்காத தல..

"இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!"
- சோலி முடிஞ்ச்சி.., ஏம்பா கொடநாடுக்கு கொசுமருந்து அடிச்சாச்சா..!?


Thursday 5 November 2015

பரமக்குடி பகவலன் ஒலகப் புரவலன்

//சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்//
- இதை அப்படியே தஞ்சாவூர் _____ ____ ____ ____ பின்னாடி வர்ற சந்ததிகள் _____ ____ _____ _____
 //சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன்//
- அண்ணன் எலக்சன தான் சொல்றாப்ல போல...


//நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன்//
- கமல என்பதை கமல்-ன்னு நியுமராலஜி படி மாத்துறதும் நாத்திகம் தான்... 



  //கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன்//
- ஆமாமா, அன்பேசிவம், தசாவதாரம், விஸ்வரூபம், ஹேராம் ன்னு பேரு மட்டும் வெச்சு அழகு பாத்துக்க வேண்டியதுதான்... 


//விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன//
- என்ன பண்றது? 'நாட்டை விட்டு ஓடிப் போறேன்'னு ஓன்னு ஒப்பாரி வெச்சு போராட்டம் பண்ணத் தெரியாத மான ரோசமுள்ளவங்களா போயிட்டாங்க..!!



//விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்//
- அப்போ இது வரைக்கும் சொன்னது என்னவாம்?



//நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம்.//
- யார்றாது? ஒலகத்து கிட்ட திருப்பிக் கேட்டது?


 //படைப்பு பூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை//
- தக்காளி, ஆஸ்கார் வாங்கியே ஆகணும்..!!



//படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது//
- ஓ... அதான், பிரெஞ்சு, இங்கிலீஷ், கொரியன்ன்னு வளைச்சு வளைச்சு அடிச்சு விடறீங்களா?!


 //கே.பாலச்சந்தர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை//
- ஆனா, அவரு உங்கள நல்லா வெச்சு அயகு பாத்தாரே..!!



//எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்//
- ராஜ்தாக்கரே மீட்டிங்க்ல டீல் ஓகே ஆகிடுச்சு போல...!!


Sunday 1 November 2015

அறிந்தும் அறியாமலும்...

கடந்த ஒரு வாரத்தில் மூன்று  முறை நண்பர்களுடன் குழந்தை வளர்ப்பு, பாலியல் கல்வி, சமூகச் சூழல் குறித்து ஏகப்பட்ட பேச்சுகள், கருத்துக்கள், விவாதங்கள், விமர்சனங்கள்...  பகிர்ந்தால் என்ன என தோன்றியது!! மாத்ருபூதம், காமராஜ், ஷாலினி, நாரயனரெட்டி அளவுக்கு நம்மால விளக்கமா சொல்ல முடியாது என்றாலும், முடிந்த வரை...

நண்பர்களுடைய ஒட்டுமொத்த கருத்தும் இதுதான்.  "உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வை நாம் சொல்லிக் கொடுத்து ஏற்படுத்தத் தேவையில்லை.  நாம் எப்படி கற்றுக் கொண்டோமோ அதேபோல் நம் குழந்தைகளும்  கற்றுக் கொள்வார்கள்...",
"முள்ளு மேல சேலை விழுந்தாலும்...",
"கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லை விட்டா...",
"ஒரு ஆண் தப்பு பண்ணா அது அவனோட போயுடும், ஆனா ஒரு பொண்ணு..."
- இதே ரேஞ்சுல இன்னும் நிறைய...  பேசாம ப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணிடலாமான்னு கூட சில நொடிகள் தோணிச்சு.

"உங்கள்ள எத்தனை பேருக்கு வீட்டுல பாத்து பண்ணி வெச்ச கல்யாணம்?"
பாதிப் பேரு ஆமான்னு சொல்ல,
முதல்ல ஒருத்தர பாத்து கேட்டேன்.  "நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணம் பண்ண எவ்ளோ நாள் ஆச்சு?"
"மூணு மாசம்.."
"மூணு மாசத்துல உங்க மனைவி கூட பேசினீங்களா?"
"ம்ம்.. பேசினோம்"
"வெளிய எங்கேயாவது கூட்டிட்டு போனீங்களா?"
"எங்க இதுல அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க..!!"
"உன் சாதி மயிர பத்தி கேக்குல, ரெண்டு பேரும் ஒண்ணா வெளிய போயிருக்கீங்களா இல்லையா?
"ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரியாம ரெண்டுமூணு தடவ வெளிய போயிருக்கோம்.."
"எங்க?"
"கோவிலுக்கு... அப்புறம் துணிக் கடைக்கு.."
"போன்ல பேசும் போது என்ன பேசுவீங்க?"
"பொதுவா பேசுவோம்.."
"இந்தியப் பொருளாதாரம் பத்தியா..!?, செக்ஸ் பத்தி பேசினது உண்டா?"
"ச்சே.. ச்சே.., இல்ல.."

அடுத்த ஆள்...
"நிச்சயதார்த்தம் முடிஞ்சபிறகு மனைவிய வெளிய கூட்டிட்டு போயிருக்கீங்களா?"
"கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் பொண்ணை பாத்தேன்..."

"சரி, அந்த ஒரு வாரத்துல என்ன பண்ணீங்க..?"
"கல்யாண வேலையா அலைஞ்சதுல மனைவி கூட அதிகமா பேசல..."

இருவரிடமும் பொதுவாக கேட்டேன்...
"முதலிரவு அன்னைக்கு என்ன பண்ணீங்க..?"
"எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ, அதைத்தான்..."
"எல்லாரும் பண்ணது இருக்கட்டும், நீ என்ன பண்ண..?"
"எப்படின்னு சொல்லத் தெரியல, ஆனா நல்லபடியா முடிஞ்சது!!"
"மேட்டர் பண்றது எப்படின்னு உனக்கு எப்படி தெரியும்?
1.வாத்தியார், பெற்றோர் சொல்லிக் கொடுத்தாங்களா?
2.நண்பர்கள் மூலம் தெரிஞ்சுதா?
3.மஞ்சள் பத்திரிக்கை, நீலப் படங்கள் மூலமா?
4.உடலுறவைப் பற்றிய தெளிவான மருத்துவப் புத்தகங்கள் மூலமா?"
"2 & 3.."
"இந்த ரெண்டு வழியுமே சரியானது அல்ல, தெளிவான விடை கிடைக்காதுன்னு தெரியுமா?"
"ஆமா..., ஆனா ஒன்னும் பிரச்சனை இல்லையே"

"முதலிரவுல உங்க மனைவி வெட்கப் பட்டாங்களா?, என்ன பண்றதுன்னு தெரியாம முழிசாங்களா?"
"மாப்ள கிட்ட பாத்து பக்குவமா நடந்துக்கோன்னு சொல்லி அனுப்பியிருந்தாங்க.."
"அதாவது புருசன் எது பண்ணாலும் பொறுத்துக்கோ, போகப் போக(!) சரியாயிடும்ன்னு சொல்லி அனுபியிருக்காங்க..!!"
"கிட்ட தட்ட அப்படித்தான்.."
"நீங்களும் அவுத்து போட்டு ரேப் பண்ணியிருக்கீங்க..?!
"?? !! ?? !! ?? !!.."


"உங்களுக்குத் தான் ஒரு எழவும் தெரியல, நம்ம குழந்தைகளுக்காவது உடற்கூறு, பாலியல் சம்பந்தப் பட்ட விஷயங்களை அவர்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி சொல்லிக் கொடுப்போம்னு தோனியிருக்கா?"
"நம்ம ஏன் சொல்லிக் கொடுக்கணும்? அவங்களா தெரிஞ்சுக்கப் போறாங்க.."
"ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரா நடக்கிற பாலியில் வன்முறைகளைப் பற்றி தினமும் கேள்விப் படுறோம், நம்ம குழந்தைகளுக்கு பாதுகாப்பா இருக்கிறது எப்படின்னு யார் சொல்லிக் கொடுப்பா?"
"அதெல்லாம் நல்லபடியாதானே பாத்துக்கிறோம்..."

"சரி போகட்டும்... குழந்தைகள் வளர வளர உடலுறுப்புகளை சொல்லித் தர்றோம் இல்ல, கண், காத்து, மூக்கு, தலை, நாக்கு- ன்னு... அதுபோல எல்லா உறுப்புகளின் சரியான பெயர்களையும் சொல்லித் தந்து இருக்கீங்களா?"
"இல்ல..."
"ஏன்?, பெயரை சொல்லித் தருவதில் என்ன தயக்கம்?, போகட்டும்... மூத்திரம், மலம் என்பதை எப்படி சொல்லித் தருகிறீர்கள்?"
"உச்சா, சூசூ, ஆய், கக்கா..."
"ஏன், சரியான பெயரைச் சொல்லி தருவதில் அப்படி என்ன அசிங்கம், வெட்கம்?"
"அது, அப்படியே சொல்லி பழகிடுச்சி..."
"சரி, தமிழ்ல சொல்ல கூச்சமா இருந்தா, கௌரவமா(!) இங்கிலீஷ்லியாவது சொல்லித் தரலாமில்ல?!, ​_ த்தா, ங்கொம்மா ன்னு சொல்ல கூச்சம் இல்ல, ஆனா இதச் சொல்ல கூச்சமா இருக்கு.."

முடிஞ்சா "குற்றம் கடிதல்" படம் பாருங்க... அதுல வர்ற ஒரு டீச்சர் புள்ளைங்களுக்கு குழந்தை பிறப்பைப் பற்றிய பாடத்தை எடுக்கும் முன்பு ஒரு மாணவனிடம் "உனக்கு அம்மா பிடிக்குமா?" எனக் கேட்டு ஆரம்பித்து, "இப்படித்தான் இந்த உலகில் நாம் எல்லாம் அழகழகா வந்து பிறக்கிறோம்.."ன்னு சொல்லி முடிப்பார்.  ரொம்ப அழகா இருக்கும்.

சில வாரங்களுக்கு முன் Paul Walker நடித்த Running Scared படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு தேடுதலுக்காக 11 வயது நிரம்பிய தன மகனை அழைத்துக் கொண்டு செல்வார்.  வழியில் ஒரு நிர்வாண க்ளப்பில் சென்று பார்க்க எத்தனிக்கையில், மகன் கேட்பான், "இங்கு உண்மையிலேயே நிர்வாணமாக இருப்பார்களா?"
"ஆம், 21 வயசுக்கு மேல நீ வந்து பாக்கலாம்..."
"நான் அம்மாவை நிர்வாணமாக பார்த்திருக்கேன், இதெல்லாம் பெரிய விஷயமா என்ன..?"

சினிமாவை தவிர்க்க முடியாது தான்,  ஆனால் அவற்றில் zoom செய்து காட்டப் படும் cleavage-ம், தொப்புளும் உடற் பாகங்களேயன்றி வேறொன்றும் இல்லை என்ற மனநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் மாற்ற முடியும்.  குழந்தைகளின் வயதுக்கு ஏற்றார் போல் தொடுதல், சுய இன்பம், பீரியட்ஸ் போன்றவற்றை நாமே சொல்லிக் கொடுத்தல் நல்ல சந்ததிகளை உருவாக்கும்.

"இவ்ளோ பேசுறியே, உன் புள்ளைங்கள எப்படி வளர்க்கிற?"
"என் பெரியவளுக்கு 15 வயசாகுது..., எனக்கு போன் பண்ணி, அப்பா, வரும் போது எனக்கு நாப்கின் மறக்காம வாங்கிட்டு வந்திடுன்னு என்கிட்டே சொல்றதுக்கு அவளுக்கு எந்த கூச்சமும் இல்ல..."

நண்பர் ஒருவர், சிங்கப்பூரில் வேலை, வீட்டில் பெண் பார்த்து முடிவு செய்து விட்டனர்.  கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்புதான் ஊருக்கு வந்தார்.  கல்யாணமும் முடிந்தது.  மறுநாள் காலை திருமணம் செல்லாது என முடிவு செய்யப்பட்டு உறவினர் அனைவரையும் வெறுத்து, உடனடியாக சிங்கப்பூர் சென்று விட்டார் திரும்ப வரவே மாட்டேன் என்ற முடிவுடன்.  ஏனென்றால் அவருக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டவர் ஒரு அரவாணி!!

நெருங்கிய உறவினர், பெண் முடிவு செய்த இடம், சில பல தலைமுறைகளுக்கு முன்னே நன்கு படித்து பல பதவிகளிலும் வெளிநாடுகளிலும் சொந்தங்கள் இருக்கும் ஓர் குடும்பம்.  திருமணம் முடிந்தது, முதலிரவும் முடிந்தது... மறுநாள் புதுப் பெண் வீட்டைக் கூட்டி விட்டார்.  விசாரித்ததில், "உங்க பையனுக்கு ஒண்ணுமே தெரியல..."ன்னு புகார் செய்ய, நம்மாளுக்கு வெக்கமாகிப் போய் விட்டது.  மேற்படி விசாரணையில் நம்ம எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எஞ்சின் ஓட்டுவது பற்றி ஒண்ணுமே தெரியல.  பிறகு மனநல மருத்துவரிடம் இருவரையும் அழைத்துச் சென்று விளங்க வைத்து அடுத்த ஓரிரு நாட்களில் தேரோட்டம் சிறப்பாக நடந்தேறி விட்டது.

மேற்சொன்ன ரெண்டு நிகழ்வுகளிலும் மேலோங்கி நிற்பது பெற்றோரின் அலட்சியமன்றி வேறேதுமில்லை.

குறைந்தபட்சம் மேஜர் ஆன பிள்ளைகள் உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill, குழந்தை பிறத்தல் போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருத்தல் அவர்களுக்கான அதிக பாதுக்காப்பையும் தைரியத்தையுமே தரும்.

கீழே உள்ள நடிகை கஸ்தூரியின் படத்தை உங்கள் குழந்தையிடம் காட்டுங்கள்.  தாராளமாக காட்டலாம்.  அவர்களுக்கு இது ஆபாசமாக தெரியவில்லை என்றால் நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.  அவர்கள் "அய்யேய்யே..." என முகம் சுழித்தால் வழிகாட்டல் நிச்சயம் அவசியம். 

















அன்புடன் 
- மலர்வண்ணன்

Sunday 20 September 2015

இதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்?!

உண்மையிலயே மரியாதைக்குரிய நண்பர், ஒரு கார்பரேட்டில் நல்ல பதவியில் உள்ளவர், வணிக விஷயமாக அவரே வரச் சொன்னார். நானும் ஆவலோட போய் உக்காந்து நம்ம அருமை பெருமை எல்லாம் ஆர்வத்தோட எடுத்து விட, பத்து நிமிசம் பொறுமையா கேட்டுட்டு அவர் ஆரம்பிச்சார்.

"நம்ம கம்பெனியில ஒரு Event நடத்துறோம்.., சென்னையின் பல கம்பெனியில இருந்தும் பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க.., உங்க கம்பெனிய ஸ்பான்சர் பண்ண சொல்லுங்களேன்.."ன்னு ஆரம்பிச்சார்.

"Event ல என்ன பண்ணுவீங்க"?!


"கார்பரேட்ல உயர் பதவியில இருக்கும் முடிவெட்டி, காட்டன் சாரி கட்டி, அளவான லிப்ஸ்டிக்குடன இருக்கும் ஒரு மிடில்ஏஜ் அம்மிணிய நாலு பெங்களூர் மாடல்ஸ் சூழ குத்துவிளக்கு கொழுத்துறோம்..."


"ஓ..."


"Meteorological Science in the Human Kind Revolution with the Programme of Java in the Element of Kabali Rajnikanth" ன்ற தலைப்புல நாலைஞ்சு அப்பாட்டக்கருங்கள வெச்சு ஒரு டிஸ்கஷன்.."


"ஊ.."


"எங்க industry-ல நல்லா perform பண்ணவங்களுக்கு மெடல், கப், அவார்டு குடுப்போம்..."


"ஆஹாங்... அப்புறம்...!?"


"selfie & groupie session ..."


"வாவ்... மைண்ட் ப்ளோயிங்..., அப்புறம்?!"


"வேறென்ன டின்னர் வித் காக்டெயில் தான்..."


"இதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்..?!"


"என்ன தல இப்படி கேட்டுட்டுடீங்க, எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வர்றாங்க, நீங்க இஷ்டப் படி விளம்பரம் செய்துக்கலாம். ப்ரோக்ராம் நடுவுல உங்களோட promotional-க்கு 10 நிமிசம் slot தருவோம்..." (என் காசுல எனக்கேவா!!)


"எங்க கம்பெனி விளம்பரம் எங்கேயாவது பாத்திருக்கீங்களா?!"


"இல்லையே..."


"அதுக்கு தான் எனக்கு சம்பளம் குடுக்குறாங்க..."


மேற்கொண்டு அதைப் பற்றி இருவருமே பேசிக்கொள்ளவில்லை.ஈயம் பூசுறவன் கேரக்டர்ல கவுண்டமணி ஒரு வசனம் சொல்லுவார், "நீ வெச்சிருக்கிறதே இந்த ஒரு குண்டான் தான், அதையும் பிச்சை எடுக்க வெச்சிருக்க..., அதுல ஈயம் பூசித்தான் பிச்சை எடுப்பியா..?!"


பாவம், மரியாதையை இழந்துட்டார்...

Thursday 17 September 2015

ஐய்யகோ... நம்பள்கியின் தளம் முடக்கப் பட்டதா?

இன்னைக்கு காலையில கூட நல்ல தானே இருந்திச்சு...

பெரியாருக்கும் புள்ளையாருக்கும் வாழ்த்து சொல்லி இருந்தாரே...
திருக்குறள் எல்லாம் போட்டு விளக்கம் குடுத்திருந்தாரே...


இந்த வேலையைப் பண்ணினது CIA-வா, RAW-வா, ISI-யா?!
ஒருவேளை பாரதி, ராசாசி, சின்னைய்யா என அடித்து ஆடியதில் ஆட்டம் கண்ட RSS VHP PMK கோஷ்டிகளா?!


கி.ரா.வின் கதைகளை மேலும் சுவாரசியமாக இனி என்று படிப்பேன்?!
கிளுகிளு சமையலை இனி என்று சுவைப்பேன்?!
அமெரிக்க சட்டங்களை இனி எப்படி அறிவேன்?!


தமிழ்மணத்தில் இந்த LOGOவை இனி என்று காண்பேன்?!
என்னை ஆசையாக சிஷ்யா என்றழைத்த எழுத்துக்களை காண எங்கு போவேன்?



சைதை தமிழரசி தாக்கப் பட்டார்களா?!
எங்கே தாக்கப் பட்டார்கள்?!
எதால் தாக்கப் பட்டார்கள்?!
எப்படி தாக்கப் பட்டார்கள்?!
பிரச்சார பீரங்கி, பேச்சுப் புயல், சைதை தொகுதி தலைவி தாக்கப் பட்டார், கண்ணீர் இல்லையா? கம்பலை இல்லையா? கடையடைப்பு இல்லையா?

Saturday 12 September 2015

பேர மாத்துறியா? சாதிய மாத்துறியா!?

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு:

அப்பாவின் ஆபீஸில் இருந்த ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்கப் போன எடத்துல தாசில்தார் நல்லா திட்டி திருப்பி அனுப்பி விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்.  அப்பா அப்போ யூனியன்ல செம பவர் உள்ள ஒரு ஆள்.., எந்த அளவுக்கு பவர்ன்னா, தன்னுடைய ஜி.எம்.ஆன ஒரு பாலக்காட்டு நாராயண ஸ்வாமியை தரக் குறைவாக பேசிவிட்டார் என்பதற்காக பாதிக்கப் பட்டவர் முன்னிலையில் வைத்து அந்த பா.கா.நா.ஸ்வா-யை தலையில் செருப்பால் அடித்தவர்.  பிறிதொரு சமயம் அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

தாசில்தார என்னன்னு பாத்துருவோம்ன்னு அப்பா அந்த பார்ட்டிக்கு தைரியம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா...
இவர் கொடுத்த அப்ப்ளிகேஷன பாத்த தாசில்தார் சொன்னது ரொம்ப சிம்பிள்..., "நீ கேட்டிருக்கிற சாதிக்கும் உன் பசங்களுக்கு நீ வெச்சிருக்கிற பேருக்கும் சம்பந்தமே கிடையாது, ஒன்னு உன் பசங்க பேரை மாத்து, இல்லன்னா சாதிய மாத்து"ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார்.

பசங்க பேரு... ரத்தீஷ் ஷர்மா, சத்தீஷ் ஷர்மா...!!!

தாசில்தாரை விட பல மடங்கு தடித்த வார்த்தைகளில் அப்பா அவரை திட்டி அனுப்பிட்டார். 

இது மாதிரி கூறு கெட்ட அடிவருடிகள் இருக்கிறதுனால தான் நம்ம மேல ஏறி உக்காந்து "ஹிந்தி கத்துக்கோ, ராஷ்டிர பாஷா, ஆப் கா ஹிந்துஸ்தானி"ன்னு அப்பப்போ நம்ம லங்கோட்டாவ அவுக்கிறாங்க..!!!
ஹிந்தி ஹே ஹம், ஹிந்தி ஹே ஹம் ன்னு வர்ற பாடலை தேச பக்தி பாடலா சொருகுறாங்க...!!!












முடிந்தால் இச் சிறுகதையையும் வாசிக்கவும்
http://ramansnpr.blogspot.in/2015/09/blog-post.html

யட்சன் - ஒரு நுண்ணிய பார்வை

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*



















யுவன் - பட்டாஸ்.., I am a Champion பாட்டு செம தெறி...
என்னது...?! படமா..?!
ரெண்டரை மணி நேரத்துக்கு ச்ச்ச்சும்மா வெச்சு வலுவா செஞ்சுட்டாங்க!!
தொங்கிட்டு இருக்கிற திரைக்கதையை அப்பப்போ லேசா தட்டி எழுப்பி விடுறது தம்பி ராமையா மட்டுந்தான்..!!

"யட்சன்" என்றால் இயக்குபவன் என அர்த்தமாம், நல்லா இயக்குனாருயா?!

இதுல, "டபுள் ஹீரோ சப்ஜக்ட்னா எனக்கு வொர்க் அவுட் ஆகும்"னு படம் முடிஞ்சப்புறம் அவரே சொல்லிக்கிறாரு..!!


Saturday 29 August 2015

தட் "பிரபல" மொமென்ட்...

பிரபல வலைப்பதிவர், பிரபல facebook போராளி, பிரபல கவிஞர்ன்னு தனக்குத்தானே சொல்லிக்கிறவங்க எல்லாம் உண்மையிலயே என்னதான் எழுதுறாங்கன்னு செஞ்ச ஆராய்ச்சியில  சில சாம்பிள்கள்:

பிரபல எழுத்தாளர் என கூவிக் கொண்டு திரியும் சிலரின் facebook மற்றும் blog பக்கம் போனீங்கனா...

"மிக நெருங்கிய தோழி ஒருவர், எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் என்னை அவரது fantasyயாக பல நேரங்களில் நினைத்துக் கொள்வாராம், இது அவருடைய கணவருக்கும் தெரியுமாம்...!!
நேற்று வழக்கம் போல் சாட்டில் வந்தார்...
உண்டாகியிருக்கேன் என்றார் சற்றே நாணத்துடன்...
சிறப்பு கண்ணே..., அப்பா யார் என கேட்டேன் எனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்...
அதற்கு என்னை unfriend பண்ணியிருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன்..., ஆனால் ஆள் வைத்து அடித்தார்.  அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருக்கேன்..., இதோ, இப்போதும் என்னுடைய எழுத்துக்களை சுவாசமாக ஜீவிக்கும் ஒரு தோழி தான் உரித்து உரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார், ஆரஞ்சு சுளைகளை..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்ணியம், ஆணாதிக்கம், பொறுத்தது போதும் என பொங்கும் சில கவிதாயினிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைஸ்களின் கவிதைகள்:

"உன் குறி நுழைவதற்கும்
உன் பிள்ளையை பெறுவதற்கும்
மட்டுமே உள்ளதென்று நினைத்தாயடா
என் யோனியை..."___________
- இதே ரேஞ்சில் அறுப்பேன், நசுக்குவேன், காக்காவுக்குப் போடுவேன் என அனாடமியை குறி வைத்தே தொடர்ந்து செல்லும்...
--------------------------------------------------------------------------------------------------------------------------

பிரபலங்களை குறி வைத்து தாக்கி பிரபலமடையத் துடிக்கும் ஹிப்பொக்ரைட்ஸ்

"ஏவிஎம் தனது இரண்டு ரஜினி படங்களுக்கும் சந்திரபோசையே இசையமைப்பாளராக உறுதி செய்ய, பாடல்களும் முச்சந்தியெங்கும் ஹிட்டடிக்க, பயத்திலும் பதட்டத்திலும் இளையராஜாவும் கங்கைஅமரனும் சேர்ந்து சந்திரபோஸை அமுக்க திட்டம் தீட்டினர்...  சதியாலோசனையின் ஒரு பகுதியாக சந்திரபோஸின் ஆர்மோனியத்தின் ஆறாவது கட்டை ஆள் வைத்து பிடுங்கப் பட்டது.  கவிஞர் வைரமுத்துவுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் இது.  ட்யூன் போட சந்திரபோஸ் மிகவும் கஷ்டப்பட்ட இந்த சமயத்தில் சிம்பொனி என்ற மாயையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை திசை திருப்பினர்.  அநியாங்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா கடவுள்?!  புயலென உள்ளே நுழைந்தான் ரஹ்மான் எனும் சிறுவன்..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

புனைப்பெயர் கவிஞர்கள்:

சலகை(ஜலகண்டாபுரம் என்பதன் சுருக்கம்) வேந்தன், எர்னஸ்டோ ட்ரஸ்ட்வோயிஸ்கி, மண்டேலா தாசன், வாசமற்றவள், மற்றும் பலர்..., கவிதைகளில் அனல் பறக்கும்...

"சுடுவேனென்று தெரிந்தும் எனைத் தீண்டிநாயே கள்வளே...."
"முறையறிந்து சொல்ல நான் பாரதியல்ல, முகத்திலறைந்து சொல்லும் பார்றா தீ..."
"மார்பைத் திருகியெரியும் கண்ணகியல்லடா நான் மானுடனே..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

காப்பியடிக்கப் படமென்றால் கழுவி ஊத்துவதோடு நிறுத்தாமல் அதையும் இதையும் கம்பேர் பண்ணும் ஒலக சினிமா விமர்சகர்கள்:...

"ஒரு படம் ஆரம்பித்து ஒன்பதாவது நிமிடத்தில் க்ளைமாக்ஸை நோக்கி செல்ல வேண்டும்.  எல்லா கொரியன் படங்களும் இதைத்தான் செய்கின்றன.  நம்மூரில் க்ளைமாக்ஸிற்க்கென்று தனியாக 20 நிமிடம் ஒதுக்கி வேஸ்ட் செய்கிறார்கள்...
 "திரைமொழி, உடல்மொழி, உயிர்மொழி, மயிர்மொழி எல்லாம் மெக்சிகன் படங்களில் ஆளுமையுடன் கையாளப் பட்டிருக்கும், இங்கு தமிழ்மொழி மட்டுமே மிஞ்சியிருக்கின்றது, Disgusting...!!!"
"ரே, அடூர், பெனெகல் போன்றோரை  தவிர்த்து பார்த்தால் இங்கு வெறும் வெறுமையே .மிஞ்சுகிறது..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday 8 August 2015

ஒலக சினிமா விமர்சகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

ஒலக சினிமாக்களை உட்கார்ந்த எடத்துல இருந்து பார்த்து, பார்த்த கையோட விமர்சனங்களை அடிச்சு தெறிக்க விடும் தமிழ் இணைய ஒலக சினிமா விமர்சன ஜாம்பாவான்களுக்கு,

நீங்க விமர்சனம் செய்த பல படங்களை Torrentடிட்டு கண்டுகளித்த பலரில் நானும் ஒருவன்...
எந்தத் தமிழ்ப் படம் எந்த உலக சினிமாவிலிருந்து சுடப்பட்டு எடுத்தது என நீங்க முந்தித் தரும் தகவலை facebook-ல் போட்டு அழகு பார்க்கும் பலரில் நானும் ஒருவன்...
தலைப்பிலயே 18+ என போட்டு உசுப்பேத்தி எப்படியாவது உங்கள் விமர்சனத்தை வாசகர்களை படிக்க வைக்க நீங்கள் படும் பாட்டை அறிந்தவர்களில் நானும் ஒருவன்...
ஹிட்ச்காக், கிம்கிடுக், டொராண்டினோ, அகிரா, ச.ரே தவிர வேறு எந்த மயிராண்டியும் டைரக்டரே அல்ல என நீங்கள் பொங்கும் போது புல்லரித்தவர்களில் நானும் ஒருவன்...
இதுபோக அவ்வப்போது உலக இசை மற்றும் நடனங்களை நீங்கள் விமர்சிக்கும் அழகை ரசித்தவர்களில் நானும் ஒருவன்...


உங்களிடம் கோடான கோடி வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளும் ஒரே கோரிக்கை என்னன்னா...
தயவு செய்து, விமர்சனத்தை தட்டச்சு செய்து வாசிப்பிற்காக மட்டும் வெளியிடுங்கள்...
மூஞ்சிக்கு நேரா கேமராவை வைத்து உங்க விமரசனத்தை வீடியோவாக வெளியிடாதீர்கள்...
முடியல...
தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னே ஒன்னு கடைசியா சொல்லிக்கிறேன்..., நீங்க அதுக்கு சரிப்பட்டு வரல...!!!

Cheers...!!!
மலர்வண்ணன்




Thursday 6 August 2015

ஒசாமாவுடைய சாவின் அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

பல சாம்ராஜ்யங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தி பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

தலைக்கு விலையாக பல கோடிகளை அமெரிக்கா தர வந்தும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

22வது வயதிலேயே புனிதப் போர் என்று துப்பாக்கி ஏந்திய ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

அமெரிக்காவிடம் இருந்தே கோடி, கோடியாக பணம், பயிற்சி, ஆயுதம் என்று வாங்கி குவித்த ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

சமீபத்தில் கிடைத்த அதிர்ச்சியூட்டும், நெஞ்சைப் பதற வைக்கும் அந்த காட்சி கீழே...

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|


ஒசாமா கொல்லப் படவில்லை..., தற்கொலை செய்து கொண்டார்...!!

- அன்புடன்
மலர்வண்ணன் 


Thursday 30 July 2015

இனிப்பான இனப் படுகொலை

வேலை விஷயமாக ஒரு அமெரிக்க நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். போன வேலை முடித்து factory-யில் இருந்து parking-க்கு நடந்து வரும் வழியெல்லாம் பரவலாக தேனீக்கள் செத்துக் கிடந்தன. இன்னும் சரியாக சொல்வதென்றால் கொல்லப் பட்டிருந்தன. தேனீக்கள் அழிந்து வரும் நிகழ்வு உலகின் நிலப் பரப்பில் வாழ்ந்து வரும் பிற உயிரினங்களின் அழிவிற்கு விரைவில் எடுத்துச் செல்லும் என்பது வேறு என்றாலும்....,

வனங்களையும் வயல்களையும் அழித்து, கம்பெனிகளை உருவாக்கி, பின் அதனுள்ளே குரோட்டன் செடிகளை நட்டு, வெள்ளைக்காரனை கூட்டியாந்து போட்டோ பிடித்து, மரம் வளர்ப்போம் என்று முழங்குவதும், ஈமெயில்களின் இறுதி வரியில் பிரிண்ட் எடுக்காதே, save trees என்று பொங்குவது தான் கார்பரேட்டுகளின் இயற்கை சார்ந்த அதிகபட்ச போராட்டம். 

இப்போது கண்ட தேனீக்களின் இந்த இனப் படுகொலையை எவ்வாறு செய்திருப்பார்கள்!? 

தேனீக்கள் அவை பாட்டுக்கு தேன் கொண்டு வந்து சேர்ப்பதும், ராணி தேனியிடம் நல்ல பெயர் வாங்கி ஜல்சா செய்ய முயல்வதுமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்க, அவற்றின் கூடுகளைக் கண்டு பொறுக்காத ஒருசில வொயிட்காலர் அம்பிகளும் அபிஷ்டுகளும் கல்லைக் கொண்டு எறிய, அவை திருப்பித் தாக்கி ஓட ஓட விரட்டியடித்திருக்கின்றன.

"நாங்க சத்ரியன் இல்லடா சாணக்யன்..." என கருவிக் கொண்டு அம்பிகள்  HR-க்கு தாங்கள் உடல் ரீதியாவும் மன ரீதியாகவும் தேனீக்களின் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப் பட்டதை மனம் திறந்த ஒரு ஈமெயிலில் வரைந்தனர்.

4 நாட்களாக வேலையே இல்லாமல் இருந்த HR, அடிச்சுதடா சான்ஸ் என நான்கு ஆண் செக்யுரிடிகளையும், இரண்டு பெண் செக்யுரிடிகளையும் அழைத்துக் கொண்டு தேன்கூடுகளை பார்வையிட்டு அவற்றை பல ஆங்கிள்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.  பின்னர் அவற்றை photoshop மூலம் close-up செய்து ராட்சத ஜந்துக்கள் போல உருவாக்கினார்.  அப்புறமாக தேனீக்களின் கொடூர குணநலன்களையும், விஷத் தன்மையையும், google, bing, wiki, என்சைக்ளோபீடியா என 2 நாட்கள் ஹோம்வொர்க் செய்து ஒரு பெரிய power point presentation ரெடி செய்து Admin-க்கு தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றியதால் ASAP, On Top Priority ஆவண செய்யவும் PDNF என ஊர் உலகத்துக்கே cc வைத்து, அவர் boss-யும் இவர் boss-யும் bcc-யில் வைத்து அனுப்பினார்...!!

Admin லேசுப்பட்ட ஆளா என்ன?  அவர் தேனீக்கள் பற்றி Phd பண்ணும் அளவுக்கு ஒரு ரிபோர்ட் தயாரித்தார்.  இதற்கிடையில் HR ரெண்டு தரம் அட்மின்-க்கு gentle reminder ஈமெயில் போட்டுத் தாக்கியது தனிக்கதை.  ரிப்போர்ட் தயாரானதும் அதை தன்னோட boss-க்கு approval அனுப்பி தேவுடு காத்த நேரத்தில் HR-ன் reminder-க்கு திருப்பித் தாக்கினார்.

தேனீக்களை ஒழிக்க ஆவண செய்யும் படி அனுமதி வந்தது.  அதற்கான பட்ஜெட்டை procurement team-ம், vendor-ஐ purchase department-ம் முடிவு செய்யுமாறு management உத்தரவிட்டது.

ஒரே நாளில் ஒரே நேரத்தில் அனைத்து தேனீக்களையும் ஒன்று விடாமல் அழிப்பது திட்டம்.  மொத்தம் 20 கூடுகள், கூட்டுக்கு 4 பேர் என வைத்துக் கொண்டாலும் 80 பேர்.  ஒருவருக்கு ரூ.1000 என வைத்துக் கொண்டாலும் ரூ.80000.  எரிபொருள் ரூ.40000, ஒரு நாள் தீயணைப்பு வண்டி வாடகை ரூ.10000, ஒரு நாள் ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10000, முதலுதவி சாதனங்கள் ரூ.5000, பாதுகாப்பு மருத்துவர் மற்றும் நர்ஸ் ரூ.15000, தேன் கூட்டை அழிக்கும் வீரர்களுக்கான மருத்துவ காப்பீடு ரூ.160000, இதர செலவுகள் ரூ.30000, ஆக மொத்தம் ரூ.350000 என மதிப்பீடு போடப்பட்டது.Purchase-லிருந்து டெண்டர் விட, 15 பேர் பங்கு பெற்றனர். 

எவ்ளோ கொறைச்சலா செய்வீங்க..., எந்தளவுக்கு திருப்திகரமா செய்வீங்க..., revised rates குடுங்க..., final offer தாங்கன்னு Commercial evaluation-ல் முடிவில் 5 பேர் தடித்த வார்த்தைகளில் திட்டிவிட்டு வெளியேறினர்.

இதுக்கு முன்னால அமெரிக்காவுல உங்க கம்பெனி தேனீ ஓட்டியிருக்கா..., இந்தியாவுல எத்தனை வருசமா ஓட்டுறீங்க..., தேனீ எத்தனை வகைப்படும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் பொருள் தருக...,  கடைசி மூன்று வருட  ஆடிட் ரிப்போர்ட் குடுங்க...., உங்களோட முக்கியமான மூன்று client  reference தாங்க..., போன்ற  Technical evaluation முடிவில் 5 பேர் அப்பத்தா வரை இழுத்து கழுவி ஊத்தி வெளியேறினர்.

கடைசியாக 5 vendor-களை தேர்வு செய்து அவர்களிடம் EMD-யாக ரூ.50000 DD எடுத்துக் கட்ட சொல்ல அதில் இரண்டு பேர் கரடியை விட கடுமையாக காறித் துப்பிவிட்டு சென்றனர்.

மூன்று பேர் பங்கேற்ற இறுதி கட்டத்தில் ஒருவர் ஏற்கனவே ECR-ல் தங்கியிருந்த ஒரு அமெரிக்க அம்மணியின் கெஸ்ட் ஹவுஸில் தேனீ ஓட்டிய அனுபவமும், அறிவும், திறமையும் இருந்தமையால் "MNC ஈ ஓட்டிகள்" என்ற தகுதியோடு தேர்வு செய்யப் பட்டார்.  இந்த ப்ரொஜெக்டை முடிக்க அவருக்கு ரூ.10000 தருவது என முடிவாயிற்று.

இந்த ஆப்பரேஷனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என விவாதித்ததில் அதை ஒரு சுற்றறிக்கையாக அனைத்து தொழிலாளர்களுக்கும் HR அனுப்பி, சிறந்த பெயர் வைப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்தார்.

கம்பெனியின் legal team ஒரு agreement தயார் செய்தனர்.  காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்குள் ஆப்பரேஷனை முடிக்க வேண்டும். தாமதமாக ஆரம்பித்தால் ரூ.1000-மும், குறித்த நேரத்தில் முடிக்கா விட்டால் ரூ.1000-மும் penalty.  போரின் போது தேனீக்கள் கம்பெனி தொழிலாளர்கள் யாரையேனும் முதல் முறை கொட்டினால் ரூ.1000-மும், இரண்டாம் முறை கொட்டினால் ரூ.2000-மும், மூன்றாம் முறை கொட்டினால் contract முன்னறிவிப்பின்றி terminate செய்யப்படும், வீரர்களுக்குண்டான அனைத்து பாதுகாப்புகளும் (ESI, PF உட்பட) மேற்கொள்ளப் பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு 2000 அம்ச உடன்படிக்கைகள் உருவாக்கப் பட்டன.  இந்த agreement 1+​1 ரூ.1000 பத்திரத்தாளில் பதிய வேண்டும், அதை vendor தன் செலவில் ஏற்க வேண்டும் என முடிவாயிற்று...!!

எனக்கென்ன தோணிச்சுன்னா..., இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்து அந்த தேனீக்களே coco cola-வை உறிஞ்சிக் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்குமோ..!!










அன்புடன்
- மலர்வண்ணன்



Saturday 21 February 2015

நியூஸிலாந்தின் பூசாரித்தனமும் பாகிஸ்தானின் பொங்கச்சோறும் - 1992

1978-ற்கு முன் பிறந்த கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள் இதைப் படிக்கும் போது அசை போட்டுக் கொள்ளலாம்.  1987-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நடத்திய உலகக் கோப்பையை அடுத்து, (இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாடும் என பலரும் எதிர்பார்த்து இரு அணிகளும் அரை இறுதியில் ஊத்திக் கொண்டது வேறு விஷயம்) 1992-ம் ஆண்டு போட்டியை ஆஸியும் நியூஸியும் சேர்ந்து நடத்தின.  வண்ண உடை வீரர்கள், பாகிஸ்தானுக்கு பச்சை, நல்ல வேளை இந்தியாவுக்கு காவிய கொடுக்கல..!!

போட்டிக்கு முன்பாக ரிடயர்டு ரவுடி கவாஸ்கர், “பாகிஸ்தான் தான் கோப்பையை வெல்லும்..” என அடிச்சு விட்டு இறுதி வரை மண்டையை சொறிந்து கொண்டிருந்தார்.  Wessels, Kirsten, Cronje, Rhodes, Donald என கலக்கிய தென் ஆப்பிரிக்காதான் கோப்பையை வெல்லும் என வல்லுனர்கள் ஆரூடம் கூற, ஏற்றார் போல் விளையாடிய முதல் போட்டியிலியே Boon, Marsh, Jones, Border, Waugh, Reid, McDrmott அடங்கிய ஆஸியை 170 ரன்னுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்தனர்.

Round robin-ல் தொடர்ச்சியாக தான் விளையாடிய 7 போட்டிகளிலும் நியூஸி தன் சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்று Greatbatch, Crowe, Jones, Rutherford, Watson, Larsen என power packed அணியாக மிரட்டி வந்தது.  8-வது போட்டியில் அதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்த பாகிஸ்தானை எதிர் கொண்டது.  அன்றுதான் நியூஸிக்கு சனியும் பாக்கிற்கு சுக்கிரனும் வந்து உட்கார்ந்தனர்.  ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற மதப்பிலும், அதுவரை அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணில் விளையாடி வென்ற கொழுப்பிலும், அன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு ஆஸி சென்று விளையாட வேண்டிய கட்டயாத்தினாலும், தோற்க முடிவு செய்து 106/8 என்றிருந்து, 166-க்கு ஆல்அவுட் ஆகி உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.  மெய்யாலுமே விளையாட்டாக 9 பேரை பந்து வீசச் செய்து, RameezRaja-வை செஞ்சுரி அடிக்க வைத்து திருப்தியுடன் தோல்வியடைந்தனர்.

இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தாக வேண்டும்..., 1986-ல் இந்தியா, ஆஸி, நியூஸிக்கு இடையே நடந்த முத்தரப்புப் போட்டியில் ஒரு முக்கியமான போட்டியில் ஆஸியிடம் நியூஸி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெளியேற்றும் வாய்ப்பு இருந்தது.  அப்போட்டியில் ஆஸி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து 206 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்தியாவை வெளியேற்றியது.  அவ்வார ஆனந்த விகடனில் “அவுட் ஆகிறார், ஆனால் சிரித்துக் கொண்டே வெளியேருகிறாரே..” என கபில்தேவ் கன்னத்தில் கை வைத்து புலம்புவது போல் வந்த கார்ட்டூன் இன்னும் நினைவிருக்கிறது...

மொத்தத்தில் 3 வெற்றி, 1 no result மற்றும் 1 ஓஸிகாஜி தந்த உற்சாகத்தில் பாகிஸ்தான் அரையிறுதியில் மீண்டும் நியூஸியை எதிர் கொண்டது.  263 ரன்கள் சேஸிங்கில், 140/4 என்ற நிலையில், Inzamam என்ற சிறுவன் அபிமன்யு போல உள்ளே புகுந்து 37 பந்துகளில் 60 ரன்களை விளாச இறுதிப் போட்டிக்கு MCG-யில் தன் இடத்தைப் பதிவு செய்தது பாக்.  பாம்புக்கு பால் ஊத்திய நிலையில் கறுப்புத் தொப்பிகள் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு வெளியேறினர்.
அடுத்த அரையிறுதிப் போட்டி பெரிய காமெடி... தலா 5 வெற்றிகளைப் பெற்றிருந்த இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதின.  45 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து 252 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா அழகாக சேஸ் செய்ய 43 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் என்ற நிலையில் மழை வர..., மழை விட்டு மீண்டும் ஆரம்பிக்கும் போது அப்போது உருவாக்கப்பட்ட பாடாவதி விதியின் படி தென்னாப்பிரிக்கா 1 பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தொங்க போட்டபடி வெளியேறியது, அந்தச் சோகம் இன்னும் பல வழிகளில் அந்த அணிக்கும் இன்றும் தொடர்வதுதான் பரிதாபம்.

இறுதிப் போட்டியில் கடைசி ஓவர்களில் மீண்டும் Inzamam 35 பந்துகளில் 42 ரன்களும் Akram 18 பந்துகளில் 33 ரன்கள் மற்றும் முக்கியமான 3 விக்கட்டுகளை எடுத்தும் 3 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்தின் கனவை தகர்த்தனர்.
இந்திய-பாகிஸ்தான் போட்டியில் Miandad குரங்கு மாதிரி தவ்வியது இந்த உலகக் கோப்பையின் சுவாரசியமான நிகழ்வு...
கவாஸ்கர் உளறியது பலித்து விட்ட குஷியில் PCB அவரை அழைத்து கவுரவப் படுத்தியது தனிக்கதை...!!

- அன்புடன்
- மலர்வண்ணன்