Wednesday 27 July 2016

மானும் Khan-ம்: பிரபல bloggers பார்வையில்

மான் வேட்டை கேசுல, அந்த மானே காதல் தோல்வி காரணமா லெட்டர் எழுதி வெச்சிட்டு தும்பை பூவுல தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கிடுச்சின்னு தீர்ப்பாகி சல்மான் விடுதலையான மேட்டர்,  நம்ம பிரபல bloggers பார்வையில்:

thillaiakathuchronicles கீதா & துளசிதரன்:
நான் கூகிளில் தேடியவரை சல்மான்கான் மானைக் கொன்றதாக எங்குமே தகவல் இல்லை.  நண்பர் ஒருவருடைய தளத்தில் மட்டும் அது மான் தோல் போர்த்திய நாய் என்று பதிவிட்டிருந்தார்.  எப்படிப் பார்த்தாலும் அந்த நாய்க்கு ஒரு மான் தோல் தேவைப் பட்டதால் அந்த மான் வேட்டையாடப் பட்டிருக்கலாம்.  பலவருடங்கள் இயற்கையுடனான வாழ்வில் காடுகளில் கழித்திருக்கிறேன்.  அப்போதெல்லாம் துள்ளித் திரியும் மான்களைப் பார்க்கும் போது  பின்னாட்களில் இப்படி அநியாயமாக வேட்டையாடப் படும் என உணர்ந்ததில்லை.  தவறு யார் செய்திருப்பினும் அவர்கள் சட்டப் படி திருத்தப் பட வேண்டும்.  மான்கள் இனம் காப்பாற்றப் பட வேண்டும்.


killergee தேவகோட்டை
மானே, தேனே என கொஞ்சிவிட்டு எப்படி வேட்டையாட மனசு வந்தது?  துப்பாக்கியும் கையுமாக வாட்ச்மேனிடம் பிடிபட்ட பிறகும் எப்படி தப்பிக்க முடிந்தது?  எனக்கும் அவ்வப்போது ஆசைகள் தோன்றும்.  மான்கள் இல்லா ஊரில் வசிக்க ஆசை.  மாட்டுறவன் கைய நசுக்க ஆசை.  கி.மு.85இல் வந்ததைப் போன்ற புரட்சியொன்று மீண்டும் வரவேண்டும்.  ரத்தமின்றி, யுத்தமின்றி மான்கள் சுவாசிக்க யாசிக்கிறேன்.  கான்களை தண்டிக்க யோசிக்கிறேன்..


jokkaali - ஜோக்காளி 
யாருக்கு யாரோ: ):
மான்: அந்த மான் இந்த மானுக்கு தான் சொந்தம்
கான்: அந்த மான் இந்த மேனுக்கு தான் சொந்தம


venkatnagaraj - வெங்கட் நாகராஜ்
மான் தான் மான் தான் எல்லாம் மான் தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்...
மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்.
வெங்கட் .
புது டெல்லியிலிருந்து...


kummacchionline - கும்மாச்சி
ஜட்ஜ்: சொல்லுப்பா என்ன பாத்த?
ரேஞ்சர்: அது வந்துயா...
கான்: ம்ம்.. சொல்றா... தைரியமா சொல்லு...
ஜட்ஜ்: ஏம்பா, கேக்குறோம்ல!!
ரேஞ்சர்: அது வந்துயா, மான் ஒன்னு....
கான்: டேய், ஒரு பெரிய மனுசன் கேட்டுகிட்டு இருக்காரு, வந்து போயின்னு...
ஜட்ஜ்: ஏம்பா கானு, கம்முன்னு கெட
கான்: இல்லீங்கய்யா, அவனுக்கும் 2 பொண்டாட்டி 5 புள்ள இருக்குல்ல, அந்த பயம் இருக்குமில்ல...
ரேஞ்சர்: அது ஒண்ணுமில்லீங்க, காட்டுல ஒரு மான் லவ் பண்ணி இன்னொரு மானை இழுத்துட்டு ஓடிச்சிருங்க...
கான்: ஆங்.. ஆங்.. கெளம்பு... கெளம்பு... போ... போ... 


vishcornelius - விசுAWESOME
மானுக்கொரு நீதி, கானுக்கொரு நீதி
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."
என்ன வனத்துறை?  என்ன காவல்துறை?  என்ன நீதித்துறை? எல்லாமே தண்டம்..
"கூப்பிட்டியா வாத்யாரே...!?"


nambalki - என் வாழ்க்கை அனுபவங்கள்
பொதுவாக  நான் படங்கள் பார்ப்பது கிடையாது, அதுவும் "ஷோலே"வுக்குப் பிறகு ஹிந்திப் படங்கள் பக்கமே போனதில்லை.  என் மனைவிக்கு 5 மொழிகள் நன்றாக எழுத பேச படிக்கத் தெரியும் என்பதால் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்துத் தருவார்.  ஆதலால் சல்மான் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
இங்கெல்லாம் மான் வேட்டை அல்ல, மானின் ஒரு மயிரைப் புடுங்கினால் கூட கடும் தண்டனை உண்டு, அது ப்ரெசிடெண்ட்டாக இருந்தாலும்... அது டாம் க்ரூஸோ, பிராட் பிட்டோ... நிரூபிக்கப் பட்டால் ஜெயில் உறுதி.
மான்தோலையும் புலித்தோலையும் போட்டு அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் சாமியார்கள் இருக்கும் ஊரின் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யம்..!!


பி.கு:
மேற்சொன்ன யாவும் நகைக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல, என disclaimer எல்லாம் போட மாட்டேன்.  ஏன்னா, நீங்க ரசிப்பீங்கன்ற ஒரு நம்பிக்கை தான்.


அன்புடன்
மலர்வண்ணன்


Friday 22 July 2016

காளி, வித்யாசாகர், சூர்யா-வைத் தொடர்ந்து கபாலி

தனியா சினிமாக்கு போக ஆரம்பிச்சு முதன்முதலா முதல்நாள் முதல்காட்சிக்கு (இப்போ சுருக்கமா FDFS ன்னு சொல்றாங்கோ) போன படம் கவிதாலயாவின் அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினி நடித்த "சிவா".  காலைக்காட்சிக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் தீர்ந்து விட,  கவுன்ட்டரை (அந்தக் கவுண்டர் இல்லீங்கோவ்...) விட்டு வெளியே வர இயலாமல்  அடுத்த காட்சிக்கு நின்று டிக்கெட் வாங்கி சட்டையைப் புழிஞ்சு தோள்ல போட்டுட்டு போய் உக்காந்தா, அய்யய்யோ அதுவொரு துன்பியல் சம்பவம்.  இளையராஜாதான்  காப்பாற்றினார்.  அதன்பின்னர் குசேலன், லிங்கா நீங்கலாக அனைத்து ரஜினி படங்களும் FDFS தான்...
Over to Kabali...

பூசணிக்காயை தலையில உடைக்கிறது, சண்டைல பலபேரை ஒட்டுக்கா பறக்க விடறது, ஒரே பாட்டுல குபேரனாவது போன்ற கார்ட்டூனிஸ தனங்களை விடுத்து, தளபதிக்கு பிறகு, அதாவது 25 வருசத்துக்கு அப்புறமா அப்டியே திரும்பி வந்திருக்காரு ரஜினி.

Mass Opening , எதிரிகளின் தேடல், Gang War எனச் செல்லும் காட்சிகளுனூடே இழந்த மனைவியின் ஞாபகங்களை பரிதவிப்புடன் பார்வையால் ஏக்கத்துடன் கடந்து செல்வது செம ரஜினி.

தன் மகளைத் தேடிக் கொண்டிருக்கையில் துப்பாக்கி முனையில் கூலிப் படையினரால் மடக்கப்பட்டு, அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையில் அதன் தலைவி "அப்பா..." என உரக்க அழைத்து ரஜினியை நோக்கி ஒரு துப்பாக்கியை வீச, தன் மகளைக் கண்டு கொண்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நொடிக்குள் இரு கண்களால் மகளை பார்த்துக் கொண்டே ஒரு கையால் தன்னை நோக்கி வரும் துப்பாக்கியைப் பிடிக்கும் காட்சி..., வாவ்... காலையில 03:30க்கு அலாரம் வெச்சு எழுந்தது worth தான்..

ஒவ்வொரு முறை "மகிழ்ச்சி" சொல்லும் போதும் அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏற்றார்போல் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அற்புதம். 

"வீரத் துறந்திரன்.." பாட்டில் ரஜினி மயிரைக் கோதி நடப்பது முதல் தலைவனாக உருவெடுப்பது வரை உள்ள காட்சிகள் ரணகளம்...

பிரிந்த அப்பா-மகள் சேர்ந்ததை பக்கம் பக்கமான வசனங்கள் இல்லாமல் கைகளைப் பற்றிக் கொள்வதில் உணர்த்தியது அடுத்த கட்டம்..

வழக்கமான அரைலூசு நாயகிகள் போலல்லாமல் ராதிகா ஆப்தே, ரித்விகா, தன்ஷிகா-ன்னு மூவருமே அமர்க்களப் படுத்தியுள்ளனர்...

வசனங்களின்றி "அட்டகத்தி"தினேஷ், ரோபோவைப் போன்ற கேரக்டர், கண்ணாடி பாட்டில்களால் தாக்கப்படும் வரை...

பில்லா படத்துல அஜித்த கோட்டு-கூலர்ஸோட சுத்தவிட்டா மாதிரி இதுல ரஜினியை சுத்த விட்டிருந்தாலும் அதற்குண்டான காரணத்தை ரஜினி விளக்குவது பக்கா.

என்னதான் ரஜினி, ரஜினின்னு சொன்னாலும் இது ரஞ்சித் படம்.  காம்ப்ரமைஸ் செய்யாமல் எடுத்திருப்பார் போல் தான் தோன்றுகிறது.  படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்குண்டான முக்கியத்துவத்துடன் கட்டமைத்து அளித்தது சிறப்பு.  வசனங்களில் "ரஞ்சித் வாடை"யை கொஞ்சம் அதிகமாகவே தூவியிருக்கிறார்.

"காந்தி சட்டையை கழட்டியத்துக்கும், அம்பேத்கர் கோட்டு போட்டதுக்கும் நெறய வித்தியாசம் இருக்கு.."

"நாங்கெல்லாம் மெட்றாஸ்காரங்க..., நம்புங்க..."


"சோற்றுக்கே வழி இல்லாமல் தாண்டா இருந்தோம், ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, உடுத்துறது உங்க கண்ணை உறுத்துதுன்னா , ஆமாண்டா அப்படித்தான் போடுவோம்.."


"நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா... பிடிக்கலேன்னா சாவுங்கடா..."


"நீ ஆண்ட பரம்பரைன்ன.., நான் ஆளப் பொறந்த பரம்பரைடா...."


"நாம எப்படி ட்ரெஸ் பண்ணனும்னு முடிவு பண்றதுக்கு அவங்க யாரு..."


"உன் கருப்பு கலரை அப்டியே எடுத்து என் உடம்பு முழுதும் பூசிக்கணும்..."


குமுதவல்லிக்கான தேடலில் ஒரு theme-ம் எதிரிகளுக்கான வேட்டையில் ஒரு theme-ம் வைத்து கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயண்.  க்ளைமாக்ஸ் சண்டைக்கு காட்சிக்கு "நெருப்புடா" பாடல் தெறிக்க விடுகிறது.

Gang War படமென்றாலே ச்சும்மா அனல் பறந்திருக்க வேண்டாமா?!

தேடல்கள், துரத்தல்கள், தப்பித்தல்கள், பழிவாங்குதல், சஸ்பென்ஸ் என பார்வையாளனை ஒரு நொடி கூட சீட்டில் சாயவிடாமல் செய்திருக்க வேண்டிய கான்செப்ட்.

திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் மரண மாஸாக வந்திருக்க வேண்டிய படம் கபாலி.

வெற்றிமாறன் அளவிற்கு நடிகர் கிஷோரை ரஞ்சித் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தனிப்பட்ட வருத்தம்.

டைகரிடம் (மெட்ராஸ் பட ஜானி) போலீஸ் துப்பாக்கி குடுத்து அனுப்புவது கபாலியின் பாதுகாப்புக்கா, போட்டுத்தள்ளவா?!

கபாலி - ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற அளவான வேகத்தில் செல்லும் ரஞ்சித் படம்.  ரஜினிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

பரட்டை, காளி, வித்யாசாகர், சக்ரவர்த்தி, டேவிட் பில்லா, காளையன், அலெக்ஸ் பாண்டியன், சூர்யா, ரோபோ சிட்டி வரிசையில் கபாலி..!!

பி.கு.
  • மலேசிய தமிழர்களின் வரலாறு சரியாகத் தெரியாமல் ரஞ்சித்தும் ரஜினியும் மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டனர் என இன்றிலிருந்து திடீர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கிளம்பி வரலாம்.
  •  
  •  "படத்தில் சில குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும்" என சிலபல லெட்டர் pad கட்சிகள் போராட்டம் நடத்தி இலவச விளம்பரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Saturday 16 July 2016

பிரித்து வைத்து புணர்ச்சி விதி கூறல்

"கோமாதா குளமாதா"ன்னு கும்மியடிக்கிறவன், சர்வலோகநிவாரணின்னு மாட்டு மூத்திரத்த குடிக்கிறவன், மாட்டு மூத்திரத்துல 24 கேரட் தங்கம் எடுக்கிறவன் அனைவருக்கும் இந்த இடுகை டெடிகேட் செய்யப் படுகிறது.

ம.செந்தமிழன், தஞ்சையைச் சேர்ந்தவர் இயற்கை வேளாண்மை, ஈழ விடுதலை, சமூகவியல் என பல்வேறு தளங்களில் ஆய்வுகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ள இவர் "பாலை" திரைப்படம் மற்றும் சில ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். 
செந்தமிழன் மாடுகள் குறித்து தனது facebook-ல் எழுதிய ஒரு பதிவை அப்படியே இங்கு பகிர்கிறேன்.

Over to Ma .Senthamizhan...

பசுவாகிய எனக்கு, புணர்வதற்குக் காளை தேவை!

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன். ’வளத்தி’ என்று எனக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். வளங்களைத் தருபவள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.  நான் சினையாக இருந்தபோது இங்கு வந்தேன். செம்மைவனம் வந்து ஏழு நாட்களுக்குள் கிடாரி (பசு) கன்றை ஈன்றேன். இப்போது நான் உங்களிடம் கேட்பது மிக முக்கியமான உதவி.

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல்.  பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.

என்னை செம்மைவனத்திற்கு வாங்கி வந்தவர் என்னிடம் பேசும் வழக்கம் கொண்டவர். மனிதர்களில் அவர் ’மூடர்கள்’ எனும் வகையைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, கோழி, மரம், செடி போன்ற உயிரினங்களோடு பேசுபவர்களை ‘மூடர்கள்’ என அழைப்பது நாகரிகர்களின் வழக்கம் என அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது. இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என் போன்ற மாடுகளும் இருக்கிறோம்.

பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.

சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள். காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.  காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள். மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.

மனிதர்களில் ஆணும் பெண்ணும் கூடுவது பிள்ளை பெறுவதற்காகத்தானோ என்ற ஐயம் எங்களுக்கு இப்போது எழுந்துள்ளது. ஒருவேளை மனிதர்களுக்குக் காமம் என்ற உணர்வே அற்று விட்டதோ என்ற குழப்பமும் சமீபகாலமாக உருவாகியுள்ளது. மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள். காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது.

அவர்கள் பீச்சியடிக்கும் விந்தணுவுக்குச் சொந்தமான காளைகள் ஏதோ சில வெளிநாடுகளில் தோன்றியவை. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்குறி, பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.

எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை. அதேவேளை, ஒரு செய்தியை உரைக்க வேண்டியுள்ளது. எங்கள் புணர்ச்சியை நீங்கள் நிராகரித்த பின்னர், நாகரிகச் சமூகத்தில் உருவாகியுள்ள மலட்டுத் தன்மையின் அளவைக் கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள். உங்களுக்குத்தான் ஆய்வுகள் என்றால் பிடிக்குமே. மலடு நீக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியுள்ளது எனப் பாருங்கள்.

ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது. காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.  பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே. சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.

புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில். அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது. இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?  நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.

எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை. எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.

பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம். இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.

ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை. எங்களை வளர்க்கும் மக்களுக்கு நாங்கள் வெற்றுச் செலவினமாக மாறிப்போனோம்.  பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.

உங்களுக்கு இவையெல்லாம் தேவையற்ற சேதிகள். எந்தப் பாலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பது உங்கள் கவலை. நாய்ப் பாலில் அதிக சத்து இருப்பதாக ஏதேனும் ஆய்வகம் அறிக்கை தந்தால், நாய்களின் முலைகளை நாசமாக்கிவிடும் நவீனர்களின் சமூகம் இது.  எல்லாவற்றிலும் சத்து, ஊட்டம், உடல்நலம், மருத்துவகுணம் இருக்க வேண்டும் என்று அலைவது நவீனத்தின் மனநோய். சக உயிர்களைப் பற்றிய அறச் சிந்தனை துளியேனும் இருந்தால் எங்களுக்கு இந்தக் கொடுமை நேர்ந்திராது.

உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.

காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.  ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப் படுகின்றன.  ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.

உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?  இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும். நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்து கொண்டுள்ளது.

என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார். என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.  என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.

எல்லா உயிரினங்களையும் உங்கள் பயன்பாட்டுக்கானவையாகப் பார்க்கும் வெறித்தனத்திலிருந்து விடுபடவே மாட்டீர்களா? ஒரு மரத்தைப் பார்க்கும்போதுகூட, இந்த மரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்கள். மாடுகளாகிய நாங்கள் மனிதர்களைப் பார்க்கும்போது, ‘இந்த மனிதர்களால் என்ன பயன்?’ எனக் கேட்டால் உங்களிடம் பதில் இருக்காது.  இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.

உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.  புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள். உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.

எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’.  இப்போதும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். படும் பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.

இப்போதும் உங்களால் மாற முடியும். மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள். பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.

பால்வளம், வெண்மைப் புரட்சி ஆகிய சொற்களைக் கொண்டு எங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாவத்தை இத்துடன் நிறுத்துங்கள். உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.  நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். அந்தக் காளை எந்தப் பிறப்பாக இருந்தாலும் கவலையில்லை. கேவலம், நாங்கள் மாடுகள்தானே!

ம.செந்தமிழன் பற்றிய மேலும் தகவல்களுக்கு ம.செந்தமிழன் ta.wikipedia.org/wiki
அவருடைய இடுகைகளுக்கு http://masenthamizhan.blogspot.in/

Thursday 7 July 2016

கண்ணுதானே போச்சு!! உசுரா போச்சு?!

கீழுள்ள ரெண்டு linkம் பார்வைக்காக...

http://tamil.thehindu.com/tamilnadu/மேட்டூர்

http://tamil.thehindu.com/india/மஹதிபட்டினம்

மேட்டூர், மஹதிப்பட்டினம் ரெண்டு சம்பவங்களிலுமே உள்ள பெரிய டவுட்டு என்னன்னா...

ஆப்பரேஷன் பண்ணதுல முறையே 19 மற்றும் 13 பேருக்கு கண்பார்வை பறி போயிருக்குன்னா இது டாக்டர்களின் கவனக் குறைவு மட்டுந்தானா?!

ஆஸ்பத்திரிக்கு வரும் மருந்துகள் முறையானதுதானா? முடிவு தேதிகளுக்கு முன்னமே உபயோகப் படுத்தப் பட்டனவா? கலப்படம் அற்றதா? அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் டாக்டர் நிச்சயமா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?!

அதெப்படி ஒரு அரசு டாக்டர் ஒரே நாள்ல தொடர்ந்து 10-க்கும்  மேற்பட்டவர்களுக்கு ஒரே மாதிரி தப்பு தப்பா பார்வை பறி போகிற அளவுக்கு ஆப்பரேஷன் பண்ணியிருப்பார்?!

அப்படியே டாக்டர் செய்திருந்தாலும் அவரை அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?  அடுத்த ஊர்ல போய் அவர் என்ன பஞ்சு முட்டாயா விற்பார்? அதே தொழிலைத்தான் பார்க்கப் போகிறார்!!

பாலாஜி சக்திவேல்-ன் "சாமுராய்" படம் தான் கண்முன் வந்து போகிறது...

ஆஸ்பத்திரி மருந்துகளுக்கு விடப்படும் டெண்டர், டெண்டரை எடுத்து நடத்தும் நிறுவனம்/ஆள், வாங்கப் படும் மருந்து நிறுவனங்கள், அவற்றின் முதலாளிகள், மருந்துகளின் சந்தை விலை, அரசு நிர்ணயித்த விலை, அரசின் கொள்முதல் விலை, மருந்துகள் தயாரிக்கப் படும் ஆய்வுக்கூடங்கள்/தொழிற்சாலைகள், மருந்துகள் சேமித்து வைக்கப் படும் குடோன்கள், அந்தந்த ஊர்களில் இம்மருந்துகளை அனுமதிக்கும் மருத்துவ டீன்கள், பின்னணி டீலிங்குகள் இந்த விபரமெல்லாம் மீடியாகாரங்க நோண்டி போட மாட்டாங்களா?!

அவங்கள இதுமாதிரி CBI விசாரணை பண்ணுவாங்களா?!


சுமார் பத்து வருடங்களுக்கு முன், சன் டிவி- ன்னு நெனைக்கிறேன்... லஞ்சம் புழங்குவதில் டாப் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது எது என எதிர்ப்பார்ப்புடன் ஒரு டாக்குமெண்டரி வந்தது... பலரும் போலீஸ் அல்லது RTO தான் இருக்கும் என நினைத்திருக்க முதலிடம் பிடித்ததோ மருத்துவத் துறை..!!  அந்த இடத்தை யாருக்கும் விட்டுத் தராமல் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறதோ?!

இன்னும் எத்தனை பேருக்கு என்னவெல்லாம் போகப் போகுதோ?!

Wednesday 6 July 2016

அறிந்தும் அறியாமலும் - Final Conflict

அறிந்தும் அறியாமலும் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு மேல் தொடர வேண்டாமென்று தான் இருந்தேன்.  இரண்டாம் பாகத்தின் இறுதி வரிகள் "குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!" என்றுமுடித்திருந்தேன்.

இன்று வலைதளத்தில் http://indiatoday.intoday.in/story/morphed-images-on-facebook-drive-salem-woman-to-suicide/1/702582.html இந்த செய்தியைப் பார்த்த பின் மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன்.  வினுப்ரியா தற்கொலை செய்தியை கேள்விப்பட்டவுடன் முதலில் என் மனைவியிடம், "என்ன இப்பெண்ணை கொஞ்சம் கூட தைரியம் இல்லாம வளர்த்து வெச்சிருக்காங்க, இந்த மாதிரி சமயத்துல பெற்றோர் தானே ஆதரவா இருக்கணும்..., ஒரு வேளை அவங்களே இப்பெண்ணை சந்தேகப் பட்டு மனம் புண்படுற மாதிரி பேசியிருப்பாங்களோ..!!"ன்னு வருத்தப்பட்டு சொல்லிட்டு இருந்தேன்.

அதுதான் நடந்திருக்கு...


ஒருவேளை இக்கடிதம் வினுப்ரியா தான் எழுதியிருந்தார் எனும் பட்சத்தில் அவர் போட்டோவை morphing செய்து வெளியிட்ட சைக்கோ பொறம்போக்கிற்கு அடுத்த குற்றவாளிகளாய் கருதப் பட வேண்டியவர்கள் அவருடைய பெற்றோரே.

"காலேஜுக்கு போனோமா வந்தமான்னு இல்லாம கண்டவன்கிட்டயும் பல்லைக் காட்டிட்டு வந்திருப்பா.."
"இவ சும்மா ஒழுக்கமா இருந்திருந்திருந்தா இன்னைக்கு நமக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்குமா...?!"
"வெளிய தலை காட்ட முடியல, செத்துறலாம் போல இருக்கு, இதெல்லாம் பாத்துக்கிட்டு இவ மட்டும் எப்படித்தான் இருக்காளோ.."
"இனி எந்த முகரைய வெச்சிக்கிட்டு இவளுக்கு மாப்பிள்ளை தேடுறது..."
"பேசாம நம்ம எல்லாரும் குடும்பத்தோட சாவலாம், நம்ம செத்தப்புறம் இவ மட்டும் எவன் கூட வேணாலும் சந்தோஷமா இருக்கட்டும்..."

இது போன்ற அல்லது இன்னும் தரக் குறைவான வசவுகளை வினுப்ரியா அவரின் பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கக்  கூடும்.  ஏற்கனவே இருந்த மன உளைச்சலில் இதுவும் சேர்ந்து கொள்ள சாவது தான் ஒரே வழியென முடிவெடுத்திருக்கலாம்.

கர்ப்பிணி மனைவியை பெண் டாக்டரிடம் check up க்கு அழைத்துச் செல்லும் போது கணவனை, "நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க சார்.."ன்னு சொல்ற சமூகத்துல தான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கோம்.
"என் மனைவி, அவள் கர்ப்பத்திற்கு காரணம் நான், வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது, என்னை மீறி அப்படி உள்ளே என்ன தான் செய்வீர்கள்? நான் ஏன் வெளியே இருக்க வேண்டும்?  நான்  பார்த்திராததையா நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்..?!  என எந்த ஆணும் கேட்பதில்லை.  அது பொம்பளைங்க சமாச்சாரம் என அதற்கு சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்க வேண்டியது.

இப்படி உள்ள ஒரு சமூகத்தில் நிர்வாணம் என்பதும் ஒரு சாதாரண விஷயம், அது வெறும் anatomy மட்டுமே எனப் புரிய வைப்பது ரொம்பக் கடினம்.  குழந்தை முதலே அதைப் புரிய வைத்து பழக்கப் படுத்த வேண்டும்.

வினுப்ரியா விஷயத்தில் பெற்றோர் மட்டும் அவருக்கு ஆறுதலாக இருந்திருந்தால் அல்ப ஆயுசில் அவரை இழந்திருப்பதை தடுத்திருந்திருக்கலாம்.

"எல்லாம் தனக்கு வர்ற வரைக்கும் மட்டுந்தான், நாளைக்கு உங்க வீட்ல உள்ள ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்தா நீங்களும் இப்படித்தான் இருப்பீர்களா?  கோவமே வராதா?"  என ஆறாவது அறிவை கொஞ்சம் கூட உபயோகப் படுத்தாமல் யாராவது கேட்டாலும், அவர்களுக்கான பதில், "ஆம்... உயிர் முக்கியம்..."

குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!

 

Saturday 2 July 2016

2016 ஜுன் விருதுகள்

ரெண்டு மாசமா எலெக்சன் மும்முரத்துல எந்த சேனலும் யாருக்கும் விருது குடுக்காததுனால ஜுன்2016 மாசத்துக்குண்டான விருதுகளை நாமளே குடுத்துடலாம்னு முடிவு பண்ணி...

சிறந்த பேட்டி முதல்வன் அர்ஜுன் விருது: அறுணா கோயிந்தசாமி (லீக் ஆன ஆன்ஸர் பேப்பர்ல இருந்து கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணதுக்கு)


சிறந்த மனிதநேய அன்னை தெரஸா விருது:  அமித் ஷா & டமில் மீசிக் சவுண்டு (தலித் வீடுகளுக்கு சென்று சாப்பிடுங்கள் என கூவினத்துக்கு)


சிறந்த ராஜதந்திரி சாணக்யா விருது: வைகோ (இதை அவரே கேட்டுக் கொண்டதிற்கு இணங்க..)


சிறந்த கைதட்டல் அதுஇதுஎது மா.க.ப. விருது: மேடிசன் ஸ்க்கொயர் மக்கள் (35 நிமிசத்துல 72 தபா எழுந்து எழுந்து தட்டினத்துக்காக)


சிறந்த மிரட்டல் புலிகேசி விருது:  மோடிஜீ ("30-ம் தேதிக்குள்ள கருப்புப் பணம் வெளிய வரலைன்னா...________" )


சிறந்த யோகா குரு துரோணாச்சாரி விருது:  பிபாஷா பாஸு (ஜஸ்ட் ஒன்ர அவர்ல ஒன்ர கோடி)


சிறந்த மாணவன் அர்ஜுனா விருது: பிபாஷா பாஸுக்கு பின்னாடி  உட்கார்ந்திருந்தவர்.


சிறந்த ஆராய்ச்சியாளர் மேன்Vsவைல்ட் விருது:  கா.வி.க.கு.பரம்பரை (வள்ளல் வம்சம் என்பதால்தான் வெள்ளைக்காரனே வங்கியில் கவுன்ட்டர் என பெயரிட்டான்)


சிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு விருது:  பாபா ராம்தேவ் (மாட்டு மூத்திரத்தில் 24 காரட் தங்கம் கண்டு பிடிப்பு)


சிறந்த ஹிந்தி பிரச்சார சுனா சானா விருது: எஸ்.வீ.சேகர் (ஹிந்தி தெரிஞ்சா தான் தோசை சாப்பிட முடியும் moment)


சிறந்த துப்பு துலக்கி ஷெர்லக் ஹோம்ஸ் விருது:  why.ஜி.மகேந்திரன்


சிறந்த ஒசந்த ஜாதி காஞ்சிபுரம் காமகோட்டியான் விருது: why.ஜி.மகேந்திரன்

  

சிறந்த ஒளிப்பதிவு ராஜ பார்வை விருது:  நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் CCTV (இருக்கு ஆனா இல்ல...)


சிறந்த போலீஸ் எஸ்.பி.சவுத்ரி விருது:  நுங்கம்பாக்கம் ரயில்வே போலீஸ்


சிறந்த கொள்கைப் போராளி கத்தி கதிரேசன் விருது:  செந்தமிழன் சீமான் (நுங்கம்பாக்கம் சிலோன் எல்லைக்குள்ள வராது ஒறவுகளே)