மான் வேட்டை கேசுல, அந்த மானே காதல் தோல்வி காரணமா லெட்டர் எழுதி வெச்சிட்டு தும்பை பூவுல தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கிடுச்சின்னு தீர்ப்பாகி சல்மான் விடுதலையான மேட்டர், நம்ம பிரபல bloggers பார்வையில்:
thillaiakathuchronicles கீதா & துளசிதரன்:
நான் கூகிளில் தேடியவரை சல்மான்கான் மானைக் கொன்றதாக எங்குமே தகவல் இல்லை. நண்பர் ஒருவருடைய தளத்தில் மட்டும் அது மான் தோல் போர்த்திய நாய் என்று பதிவிட்டிருந்தார். எப்படிப் பார்த்தாலும் அந்த நாய்க்கு ஒரு மான் தோல் தேவைப் பட்டதால் அந்த மான் வேட்டையாடப் பட்டிருக்கலாம். பலவருடங்கள் இயற்கையுடனான வாழ்வில் காடுகளில் கழித்திருக்கிறேன். அப்போதெல்லாம் துள்ளித் திரியும் மான்களைப் பார்க்கும் போது பின்னாட்களில் இப்படி அநியாயமாக வேட்டையாடப் படும் என உணர்ந்ததில்லை. தவறு யார் செய்திருப்பினும் அவர்கள் சட்டப் படி திருத்தப் பட வேண்டும். மான்கள் இனம் காப்பாற்றப் பட வேண்டும்.
killergee தேவகோட்டை
மானே, தேனே என கொஞ்சிவிட்டு எப்படி வேட்டையாட மனசு வந்தது? துப்பாக்கியும் கையுமாக வாட்ச்மேனிடம் பிடிபட்ட பிறகும் எப்படி தப்பிக்க முடிந்தது? எனக்கும் அவ்வப்போது ஆசைகள் தோன்றும். மான்கள் இல்லா ஊரில் வசிக்க ஆசை. மாட்டுறவன் கைய நசுக்க ஆசை. கி.மு.85இல் வந்ததைப் போன்ற புரட்சியொன்று மீண்டும் வரவேண்டும். ரத்தமின்றி, யுத்தமின்றி மான்கள் சுவாசிக்க யாசிக்கிறேன். கான்களை தண்டிக்க யோசிக்கிறேன்..
jokkaali - ஜோக்காளி
யாருக்கு யாரோ: ):
மான்: அந்த மான் இந்த மானுக்கு தான் சொந்தம்
கான்: அந்த மான் இந்த மேனுக்கு தான் சொந்தம
venkatnagaraj - வெங்கட் நாகராஜ்
மான் தான் மான் தான் எல்லாம் மான் தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்...
மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்.
வெங்கட் .
புது டெல்லியிலிருந்து...
kummacchionline - கும்மாச்சி
ஜட்ஜ்: சொல்லுப்பா என்ன பாத்த?
ரேஞ்சர்: அது வந்துயா...
கான்: ம்ம்.. சொல்றா... தைரியமா சொல்லு...
ஜட்ஜ்: ஏம்பா, கேக்குறோம்ல!!
ரேஞ்சர்: அது வந்துயா, மான் ஒன்னு....
கான்: டேய், ஒரு பெரிய மனுசன் கேட்டுகிட்டு இருக்காரு, வந்து போயின்னு...
ஜட்ஜ்: ஏம்பா கானு, கம்முன்னு கெட
கான்: இல்லீங்கய்யா, அவனுக்கும் 2 பொண்டாட்டி 5 புள்ள இருக்குல்ல, அந்த பயம் இருக்குமில்ல...
ரேஞ்சர்: அது ஒண்ணுமில்லீங்க, காட்டுல ஒரு மான் லவ் பண்ணி இன்னொரு மானை இழுத்துட்டு ஓடிச்சிருங்க...
கான்: ஆங்.. ஆங்.. கெளம்பு... கெளம்பு... போ... போ...
vishcornelius - விசுAWESOME
மானுக்கொரு நீதி, கானுக்கொரு நீதி
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."
என்ன வனத்துறை? என்ன காவல்துறை? என்ன நீதித்துறை? எல்லாமே தண்டம்..
"கூப்பிட்டியா வாத்யாரே...!?"
nambalki - என் வாழ்க்கை அனுபவங்கள்
பொதுவாக நான் படங்கள் பார்ப்பது கிடையாது, அதுவும் "ஷோலே"வுக்குப் பிறகு ஹிந்திப் படங்கள் பக்கமே போனதில்லை. என் மனைவிக்கு 5 மொழிகள் நன்றாக எழுத பேச படிக்கத் தெரியும் என்பதால் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்துத் தருவார். ஆதலால் சல்மான் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
இங்கெல்லாம் மான் வேட்டை அல்ல, மானின் ஒரு மயிரைப் புடுங்கினால் கூட கடும் தண்டனை உண்டு, அது ப்ரெசிடெண்ட்டாக இருந்தாலும்... அது டாம் க்ரூஸோ, பிராட் பிட்டோ... நிரூபிக்கப் பட்டால் ஜெயில் உறுதி.
மான்தோலையும் புலித்தோலையும் போட்டு அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் சாமியார்கள் இருக்கும் ஊரின் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யம்..!!
பி.கு:
மேற்சொன்ன யாவும் நகைக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல, என disclaimer எல்லாம் போட மாட்டேன். ஏன்னா, நீங்க ரசிப்பீங்கன்ற ஒரு நம்பிக்கை தான்.
அன்புடன்
மலர்வண்ணன்
thillaiakathuchronicles கீதா & துளசிதரன்:
நான் கூகிளில் தேடியவரை சல்மான்கான் மானைக் கொன்றதாக எங்குமே தகவல் இல்லை. நண்பர் ஒருவருடைய தளத்தில் மட்டும் அது மான் தோல் போர்த்திய நாய் என்று பதிவிட்டிருந்தார். எப்படிப் பார்த்தாலும் அந்த நாய்க்கு ஒரு மான் தோல் தேவைப் பட்டதால் அந்த மான் வேட்டையாடப் பட்டிருக்கலாம். பலவருடங்கள் இயற்கையுடனான வாழ்வில் காடுகளில் கழித்திருக்கிறேன். அப்போதெல்லாம் துள்ளித் திரியும் மான்களைப் பார்க்கும் போது பின்னாட்களில் இப்படி அநியாயமாக வேட்டையாடப் படும் என உணர்ந்ததில்லை. தவறு யார் செய்திருப்பினும் அவர்கள் சட்டப் படி திருத்தப் பட வேண்டும். மான்கள் இனம் காப்பாற்றப் பட வேண்டும்.
killergee தேவகோட்டை
மானே, தேனே என கொஞ்சிவிட்டு எப்படி வேட்டையாட மனசு வந்தது? துப்பாக்கியும் கையுமாக வாட்ச்மேனிடம் பிடிபட்ட பிறகும் எப்படி தப்பிக்க முடிந்தது? எனக்கும் அவ்வப்போது ஆசைகள் தோன்றும். மான்கள் இல்லா ஊரில் வசிக்க ஆசை. மாட்டுறவன் கைய நசுக்க ஆசை. கி.மு.85இல் வந்ததைப் போன்ற புரட்சியொன்று மீண்டும் வரவேண்டும். ரத்தமின்றி, யுத்தமின்றி மான்கள் சுவாசிக்க யாசிக்கிறேன். கான்களை தண்டிக்க யோசிக்கிறேன்..
jokkaali - ஜோக்காளி
யாருக்கு யாரோ: ):
மான்: அந்த மான் இந்த மானுக்கு தான் சொந்தம்
கான்: அந்த மான் இந்த மேனுக்கு தான் சொந்தம
venkatnagaraj - வெங்கட் நாகராஜ்
மான் தான் மான் தான் எல்லாம் மான் தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்...
மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்.
வெங்கட் .
புது டெல்லியிலிருந்து...
kummacchionline - கும்மாச்சி
ஜட்ஜ்: சொல்லுப்பா என்ன பாத்த?
ரேஞ்சர்: அது வந்துயா...
கான்: ம்ம்.. சொல்றா... தைரியமா சொல்லு...
ஜட்ஜ்: ஏம்பா, கேக்குறோம்ல!!
ரேஞ்சர்: அது வந்துயா, மான் ஒன்னு....
கான்: டேய், ஒரு பெரிய மனுசன் கேட்டுகிட்டு இருக்காரு, வந்து போயின்னு...
ஜட்ஜ்: ஏம்பா கானு, கம்முன்னு கெட
கான்: இல்லீங்கய்யா, அவனுக்கும் 2 பொண்டாட்டி 5 புள்ள இருக்குல்ல, அந்த பயம் இருக்குமில்ல...
ரேஞ்சர்: அது ஒண்ணுமில்லீங்க, காட்டுல ஒரு மான் லவ் பண்ணி இன்னொரு மானை இழுத்துட்டு ஓடிச்சிருங்க...
கான்: ஆங்.. ஆங்.. கெளம்பு... கெளம்பு... போ... போ...
vishcornelius - விசுAWESOME
மானுக்கொரு நீதி, கானுக்கொரு நீதி
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."
என்ன வனத்துறை? என்ன காவல்துறை? என்ன நீதித்துறை? எல்லாமே தண்டம்..
"கூப்பிட்டியா வாத்யாரே...!?"
nambalki - என் வாழ்க்கை அனுபவங்கள்
பொதுவாக நான் படங்கள் பார்ப்பது கிடையாது, அதுவும் "ஷோலே"வுக்குப் பிறகு ஹிந்திப் படங்கள் பக்கமே போனதில்லை. என் மனைவிக்கு 5 மொழிகள் நன்றாக எழுத பேச படிக்கத் தெரியும் என்பதால் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்துத் தருவார். ஆதலால் சல்மான் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
இங்கெல்லாம் மான் வேட்டை அல்ல, மானின் ஒரு மயிரைப் புடுங்கினால் கூட கடும் தண்டனை உண்டு, அது ப்ரெசிடெண்ட்டாக இருந்தாலும்... அது டாம் க்ரூஸோ, பிராட் பிட்டோ... நிரூபிக்கப் பட்டால் ஜெயில் உறுதி.
மான்தோலையும் புலித்தோலையும் போட்டு அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் சாமியார்கள் இருக்கும் ஊரின் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யம்..!!
பி.கு:
மேற்சொன்ன யாவும் நகைக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல, என disclaimer எல்லாம் போட மாட்டேன். ஏன்னா, நீங்க ரசிப்பீங்கன்ற ஒரு நம்பிக்கை தான்.
அன்புடன்
மலர்வண்ணன்